search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் பலாத்காரம்"

    • நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.

    'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.

    பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

    'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.

    • சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.
    • சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்தனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிக்கிறீர்கள் என்று கேட்டனர். மேலும் சிறுமியின் காதலனை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர். காளி வேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும், சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காளி வேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது, ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார்.
    • லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த வாரம் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கு மயானத்தில் நடந்தது. அந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.

    அந்த சமயம் மகளின் சிதை அருகே கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனே வெளியே இழுத்து காப்பாற்றினார்கள்.

    இதில் லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் இறந்ததில் இருந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதனால் அவர் துக்கம் தாங்காமல் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    • வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர்.
    • உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள். அதேபோன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இருந்து 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் கேரளாவுக்கு வந்திருந்தார்.

    கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த அவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் இருந்த கடற்ரைக்கு சென்று அமர்ந்திருந்தார்.

    கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவரிடம் 2 வாலிபர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். நட்பாக பழகுவது போன்று பேசியதால், அவர்களுடன் அந்த பெண் பேசியிருக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர்கள், அமெரிக்க பெண்ணை மது குடிப்பதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்பு 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு போதை தலைக்கேறி மயக்க நிலைக்கு சென்றார்.

    இதையடுத்து அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்த ஒரு பழைய கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்தபிறகே அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தார்.

    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தான் தங்கியிருந்த ஆசிரம அதிகாரிகளுடம் அமெரிக்க பெண் தெரிவித்தார். அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கருநாகப்பள்ளி போலீஸ் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது செரிய ஜீக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (வயது28), ஜெயன்(39) ஆகிய இருவர் தான் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாக பேசுவது போல் நடித்து, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க செய்து பாலியல் பாலத்காரம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    • கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார்.

    இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
    • குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு.

    கொச்சி:

    கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    கேரளாவின் கொச்சி அருகே உள்ள அலுவா நகரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பீகார் தம்பதியரின் 5 வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலையில் காணாமல் போனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.

    மறுநாள் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு பின்புறம் சிறுமியின் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், அவனும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி என்பதும், சிறுமியின் குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்டபோது அந்த குற்றவாளி போதையில் இருந்ததாகவும், நேற்று காலை போதை தெளிந்ததும் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறை மீது எதிர்க்கட்சி தலைவர் சதீசன் குற்றம்சாட்டியிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர் குழந்தையைக் கடத்திச் சென்றது தெளிவாகத் தெரிந்த பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கூறினார்.

    "கேரளாவில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அதிகமாக பயன்படுத்தியமையே இந்த குற்றத்திற்கு காரணம் என போலீசார் கூறுகிறார்கள். மது மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் சதீசன் வலியுறுத்தினார்.

    • நேற்றுமுன்தினம் சிறுமி காணாமல் போனார்
    • காட்டுப்பகுதியில் சிறுமி படுகாயத்துடன் மீட்கப்பட்டார்

    மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள மைஹார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி அர்காண்டி டவுன்ஷிப். இந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென்று மாயமாகியுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும், அவர் கிடைக்கவில்லை.

    சிறுமி மாயமானது குறித்து போலீசில் தகவல் தெரிவித்ததுடன், தேடும் பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்றுமாலை அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    விசாரணையில் அந்த சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், உடல் முழுவதும் கடிக்கப்பட்டுள்ளது. ரத்தம் சொட்டசொட்ட படுகாயத்துடன் காணப்பட்டுள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அவர் வசித்த இடத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வந்தவர்.

    இந்த விசயம் காட்டுத்தீயாக பரவ, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ''மைஹாரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைக்கப் பெற்றேன். எனது இதயம் வலியால் நிறைந்துள்ளன. பெரும் மனஉளைச்சல் அடைகிறேன். போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு முறையாக உயர் சிகிச்சை வழங்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். இதில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

    • கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார்.
    • குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜிக்கு 1 ஆண்டு சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்த 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (37) என்பவர் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த தங்கராஜ், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதையடுத்து அவரிடம் இருந்து தப்பித்து மூதாட்டி வீட்டிற்குள் சென்று விட்டார். இதுகுறித்து மூதாட்டி பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பான வழக்கு சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜிக்கு 1 ஆண்டு சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
    • மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை அவளது காதலன் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் காதலனிடம் மாணவி கேட்டி ருக்கிறார். இதையடுத்து அவர், தனது நண்பர்கள் சிலரை சந்திக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

    மாணவியும் காதலன் கட்டாயப்படுத்தியதன் காரணமாக, காதலனின் நண்பர்கள் 5 பேரை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால் அந்த மாணவி உடலளவில் பாதித்திருக்கிறார்.

    அதனுடனேயே பள்ளிக்கு மாணவி சென்று வந்தபடி இருந்திருக்கிறார். மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது. ஆனால் மாணவி பள்ளி நிர்வாகத்திடம் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவியிடம் சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த மாணவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆகவே அதுபற்றி சைல்டு லைன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
    • தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பட்டியலின சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    காவல்துறை உயர் அதிகாரி அம்ரிதா துஹான் இது குறித்து தெரிவித்ததாவது:

    அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். இருவரும் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் ஜோத்பூர் வந்திறங்கியுள்ளனர். தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். உடனே அங்கிருந்து வெளியேறிய இருவரும் வேறு இடம் தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த சமந்தர் சிங், தரம்பால் சிங் மற்றும் பட்டம் சிங் ஆகிய 3 இளைஞர்கள் அவர்களோடு நட்பாக பழகி அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் தருவதாக கூறியிருக்கின்றனர்.

    அவர்கள் அந்த இருவரையும் அதிகாலை 4 மணியளவில் ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மைதானத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் காதலனை அந்த 3 பேரும் கடுமையாக தாக்கினர். பிறகு அந்த சிறுமியை மூவரும் பலாத்காரம் செய்துள்ளனர். காலை நடைபயிற்சிக்காக மக்கள் வர தொடங்கியதை கண்டதும் மூவரும் ஓடி விட்டனர். பின்பு, பொது மக்களின் உதவியுடன் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். காவல்துறை மோப்ப நாய், கண்காணிப்பு கேமிரா மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலியல் பலாத்காரம் செய்த 3 நபர்கள் மற்றும் தவறாக நடக்க முயற்சித்த விடுதி மேற்பார்வையாளர் ஆகியோருக்கு எதிராக போக்சோ சட்டத்திலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

    இச்சம்பவத்தையடுத்து ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

    "பா.ஜ.க. இச்சம்பவத்தை அரசியலாக்குகிறது. குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்," என ஆளும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    அம்மூவரும் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்புடையவர்கள் என காவல்துறை கூறியிருக்கிறது. ஆனால், இதனை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள்

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. பின்னர் சகோதரிகளில் மூத்த பெண்ணை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது தங்கையையும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவன் அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

    • கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர்.

    அதன்பின் இளம்பெண் தனது வீட்டிற்கு செல்லாமல் காப்பகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் காப்பகத்தில் இருந்த போது காதலன் தனது வீட்டில் யாரும் இல்லை என அழைத்தார்.

    இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×